ஜனாதிபதி இந்த அரசாங்கம் எவ்வளவு வலுவென்று கூறினாலும், தற்போதைய அரசாங்கத்தை மக்களினால் கவிழ்த்துவிட முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை வானொலி சேவை ஊழியர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
2020ஆம் ஆண்டு வரையில் இவ் அரசாங்கத்தை அசைக்க முடியாதென ஜனாதிபதி கூறுகின்றார். மஹிந்த ராஜபக்சவையும் 2030ஆம் ஆண்டுவரையில் அசைக்க முடியாதென கூறினார்கள்.
எனினும் மஹிந்த ராஜபக்சவை அசைத்து விட்டார்கள், எனவே நன்றாக நினைவில் வைத்துகொள்ளுங்கள், இலங்கை மக்கள் மிகவும் பொறுமையானவர்கள்.
இவ் வருடத்தினுள் ஜனவரி மாதம் 08ஆம் திகதி மக்கள் தீர்மானம் ஒன்றை வழங்கியிருந்தார்கள். அத் தீர்மானத்திற்கு சமமான தீர்மானத்தை எதிர்வரும் நாட்களில் மக்கள் மேற்கொள்வார்கள்.
எனினும் அந்த நேரம் எப்பொழுது என்று தான் தெரியவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment