September 14, 2015

கொடதெனிய சிறுமி தொடர்பில் திடுக்கிடும் செய்திகள்!

கம்பஹா - திவுலப்பிட்டிய - கொடதெனிய 5 அகவை சிறுமியின் மரணம் கழுத்து நெறிப்பட்டமையால் ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

பதில் காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போனதாக கூறப்பட்ட இந்த சிறுமி பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்

இந்தநிலையில், மரணித்த சிறுமியின் பிரேத பரிசோதனையின்போது அவர் கழுத்து நெறித்து கொல்லப்பட்டமையும் அத்துடன் அவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கம்பஹா, கல்பொத்த பகுதியில் கணவன்,மனைவி மற்றும் அவர்களின் குழுந்தை ஆகியோர் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் முக்கிய சந்தேகத்துக்குரியவர் பஸியால பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்

இதனையும் காவல்துறை பதில் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொகவந்தலாவ பகுதியில் 15 அகவை சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment