பல்கலைக்கழக மாணவர்களின் தலைமைத்வப் பயிற்சியை நிறுத்துவதற்கு பல்கலைக்கழக மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்குப்பதிலாக பல்கலைக்கழக மாணவர்களின் சர்வதேச மொழித்திறனை மேம்பத்தும் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் மாணவர்களின் எதிர்காலத்திற்கு மேலும் வலுச் சேர்க்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடி பல்கலைக்கழக மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்துவது புதிய அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment