July 13, 2015

கனவருடன் ஏற்பட்ட முரண்பாடு தனக்குத்தானே தீ மூட்டிய காவற்துறை அதிகாரி

அச்சுவேலி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பதிவு திருமணம் செய்த கணவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்று பெற்றதில் விரத்தியடைந்து தனக்கு தானே பொற்றோலை உற்றி தீமுட்டிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஞானச்சந்திரன் பகீரதி எரிகாயங்களுக்கு உள்ளகி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பணியற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தார் நீதிமன்றம் ஓன்றில் பணியற்றும் நபர் ஒருவருடன் ஏற்பட்டபழக்கம் காதலாகி பின்னர் இருவரும் பதிவுத்திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

இந்நிலையில்அச்சுவேலி இடைக்காடு பகுதியில் உள்ள  தனது கணவன் வீட்டுக்குச்சென்று தானக்குதானே தீமுட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காவற்துறை உத்தியோகத்தர் அச்சுவேலி வல்லை ரேட்டை சேர்ந்தவர் என்றும் இவருடை மரணம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கபடுகின்றது.

மரணவிசாரனை மற்றும் பிரேதபரிசோதனைகளின் பின்னர் சடலம்இன்று குடும்பத்தரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment