July 06, 2015

மாற்றுவழியை நாடும் மஹிந்த!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் வேட்புமனு பெற்றுக்கொள்வதில் ஏதேனும் பிரச்சினை ஏற்படின், வேறு கட்சியின் கீழ் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளை மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினர் மேற்கொண்டுள்ளனர்.

இதற்காக, கொழும்பு, விஜேராம வீதியில் அலுவலகமொன்றும் திறக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவையேற்படின், தனித்து போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவித்தன. 

No comments:

Post a Comment