July 22, 2015

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிப்பதற்காக இலங்கை வந்திருக்கின்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதன் போது யாழ் மாவட்டச் செயலகத்தில் பிரதித் தேர்தல் ஆணையாளர் தலைமையிலான தேர்தல் திணைக்கள அதிகாரிகளை சந்தித்துக் கலந்துரையாடினர். இதே போன்று வடக்கு மாகாண பதில் முதலமைச்சரையும் சந்தித்து நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளனர்.

பொதுத் தேர்தலை கண்காணிப்பதற்காகச் ஐரோப்பிய ஒன்றியத்தின க்றிஸ்டின் ப்ரேடா தலைமையிலான இந்த குழு கடந்த வாரம் இலங்கைக்கு வந்திருந்தது. இந் நிலையில் இன்று வடக்கிற்கும் விஐயம் செய்துள்ளது.

இதற்கமைய இ;ன்று யாழிற்கு வந்த மேற்படி குழுவினர் இதன் போது யாழ்ப்பாணத்தில் காணப்படும் தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு ஒழுங்குகள் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆய்வு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment