அமைச்சர் தலதா அத்துகோரளவின் ஆதரவாளர் ஒருவர் நேற்றிரவு இனந்தெரியாதோரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கெபே அமைப்பு அறிவித்துள்ளது.
இரத்தினபுரி, நொரஹொல்லேவத்தையில் இக்கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான, 37 வயது நிரம்பிய துஷார தேவாலேகம எனும் இந்நபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது இனந்தெரியாதோரால் வழிமறித்து அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
பொதுத் தேர்தலையொட்டிய முதல் வன்முறை இதுவென கெபே மேலும் தெரிவித்துள்ளது

No comments:
Post a Comment