June 22, 2015

ராஜகிரியவில் வீடொன்றில் இருந்து சடலம் கண்டெடுப்பு!

ராஜகிரிய பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் பல வருடங்களாக தனியாக வசித்து வந்ததாகவும் கடந்த நான்கு மாதங்களாக எவ்வித தகவலும் இல்லாததையடுத்து தேடப்பட்ட குறித்த நபர் நேற்று (21) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

நீதவான் பரிசோதனையையடுத்து, சடலம் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பு சட்டவைத்திய அதிகாரியிடம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment