May 21, 2015

வாசுவின் தாடியை இறக்கினால், மூளை வேலை செய்யும்-ரணில்!

பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தனது தாடியை இறக்கிவிட்டு வந்தால் மூளை கொஞ்சமாவது செயற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரதமர் பாராளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ பல தடவைகள் குறுக்கிட்டார். பிரதமர் தலையிடாமல் தனக்கு பேசத் தருமாறு அவரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதன்போது, இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போதே பிரதமர்  இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment