அப்போ நான் இனி எப்படி வீடு செல்வது? நான் எப்படி இனி ஊருக்குச் செல்வது? என்னுடைய கட்டில் படுக்கை வௌியே வந்தாகி விட்டது. எனக்கு மட்டுமல்ல எனது வீட்டாருக்கும்தான்... இல்லை ... இல்லை... இல்லை... எனக்கு வீடு செல்ல முடியாது...கட்டில் தலையனை எங்காவது போட்டு தாருங்கள் என்னை வீட்டுக்கு அனுப்ப வேண்டாம். அதற்கு பதிலாக அனைவரும் என்னை கொன்று சாப்பிட்டால் நல்லம். எனக்கு புதுமை நடந்துள்ளது' என்று ITN தொலைக்காட்சியில் நாடே அறியும் நபர் ஒருவர் அழுது புலம்பியுள்ளார்.
பைத்தியம் பிடித்தது போல் இருந்தார். 'நாட்டை மீட்டவரிடம் இருந்து நாட்டை மீட்டவர்' என்று அண்மைய காலத்தில் பெருமை பெற்றவர் ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்த்தன ஆவார். ITN 'சத்தியாகார' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னரே அவர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சிய நடத்திய உபுல் சாந்த சன்னஸ்கல இவ்வாறு நடக்கும் என்று தெரிந்து நிகழ்ச்சி முடிந்த பின்னரே அவ்விடத்தைவிட்டுச் சென்றுள்ளார்.
பின்னர் ITN ஊழியர்கள் சுமனதாஸவை பாதுகாப்புடன் வாகனத்தில் ஏற்றி அவரது சாரதியுடன் அனுப்பி வைத்துள்ளனர்.
'சத்தியாகார' நிகழ்ச்சி வருமாறு,