April 16, 2015

இலங்கையிலிருந்து ஆயுதங்களை பெற்ற நக்ஸ்லைட் ?

இந்திய அரசுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் நக்ஸலைட் படைகள் தங்களுக்கு தேவையான ஆயுதங்களை  இலங்கை இருந்து பெற்றுக்கொள்வதாகவும் அவர்கள் முன்னர் பாவித்த ஆயுத கடத்தல் பாதைகளை மாற்றி இலங்கை கடல் பாதை ஊடாக தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை கொண்டுவருவதாக இந்திய மத்திய புலனாய்வு  மையம் அறிவித்துள்ளது.


இந்திய மத்திய புலாய்வு மையம் மேலும் தெரிவிக்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் எப்படி தங்களுக்கு தேவையான ஆயுதங்களை கடத்தி வந்தார்களோ அந்த பாதை வழியாக நக்ஸ்லைட் படைகளும் தற்பொழுது தாயாரிக்கப்பட்ட AK வகை துப்பாக்கிகளும்,நிலக்கண்ணி , கையெறிகுண்டுகள், இரவில் பார்க்க பயன்படும் சாதனங்கள் மற்றும் தொடர்பாடல் சாதனங்களையும் பெற்றுக் கொள்வதாக இந்திய புலனாய்வு மையம் மேலும் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment