வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று பாதுகாப்பு செயலாளர் பி.எம்.யு.டி. பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் இன்று பௌத்த மஹாநாயக்கர்களை சந்தித்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைக் கூறினார்.
எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
அதுவே அரசாங்கத்தின் கொள்கையாகவும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment