இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தில்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பேசிவருகிறார்.
சுமார் அரைமணி நேரமாக நடக்கும் இந்த சந்திப்பில் இருதரப்பு உறவு குறித்து பேசப்பட்டதாகவும், இலங்கைக்கு வருமாறு மோடிக்கு சமரவீர அழைப்பு விடுத்ததகவும் தெரிகிறது.
மார்ச் முதல் வாரத்தில் மோடி இலங்கைக்கு முதல் முறையா செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக இலங்கை அதிபர் மைத்ரி பால சிறீசேனா அடுத்த மாதத்தில் இந்தியா வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment