January 27, 2015

கே.பியை விசாரித்தால் உண்மை வெளிவரும் பதறும் தே.சு.மு

கே.பி என்ற குமரன் பத்மநாதனை திறந்த நீதிமன்ற விசாரணைக்கு அழைப்பதால் புலனாய்வு துறையினரின் ரகசியங்கள் வெளியாகும் ஆபத்து இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணி எச்சரித்துள்ளது.

கே.பி.யை நீதிமன்றத்திற்கு விசாரணை செய்யும் போது பல ரகசியங்கள் பிரசித்தப் படுத்தப்படும்.

இது இலங்கை புலனாய்வு துறையினரின் விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்தநிலையில், ஜாதிக்க ஹெல உறுமயவும். ஜே.வி.பியும் கே.பியை நீதிமன்றத்தில் முன்னிலையாக்க கோருவது புலம்பெயர்ந்தவர்களுக்கு வாய்ப்பை அளிக்கும் செயல் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசம்மில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment