December 30, 2014

சல்மான்கான் நாடு திரும்பினார் !

ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரம் கருதி வரவழைக்கப்பட்ட பாலிவூட் நடிகர் சல்மான்கான், இந்தியாவில் பரவலாகத் தெரிவிக்கப்பட்ட அதிருப்தி மற்றும் கண்டனங்களைத் தொடர்ந்து நேற்று இரவோடு இரவாக நாடு திரும்பியுள்ளார்.

இவரது வாகனப் பேரணியில் சென்ற வாகனமொன்று நேற்று வெலிக்கடை, மாமரச் சந்தியில் விபத்துக்குள்ளானதில் இரு குழந்தைகள் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அமைச்சரொருவருக்கு சொந்தமான வாகனமே விபத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.