December 27, 2014

மகிந்தவுக்கு வாக்கு சேகரிக்கும் இராணுவம்

ஶ்ரீலங்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரான மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக இராணுவத்தினர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருவதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நாஷனல் என்ற தன்னார்வ அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

 கடந்த சில வாரங்களாகவே இலங்கை இராணுவத்தினர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவான தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்தப்பட்டதை நாங்கள் அவதானித்துள்ளதாக டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நாஷனல் அமைப்பின் சார்பிலான ஷான் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

  அனுப்பப்பட்ட கடிதங்களில் மகிந்த ராஜபக்சவின் படங்கள் மற்றும் அவர் கடந்த பத்து வருடங்களாக செய்த சாதனைகள் குறித்து சிங்களத்தில் எழுதப்பட்டுள்ளது.   

இது  தேர்தல் விதிகளுக்கு முரணானவை இந்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையர் மற்றும் பவ்ரல் தேர்தல் கண்காணிப்பு அமைப்பும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது, அவரும் இவை வெறுமனே வாழ்த்துச் செய்திகள் அல்ல என்பதை புரிந்துகொண்டார்   அந்த கடிதங்கள் விநியோகிக்கப்படுவதை நிறுத்துமாறு தபால் மா அதிபருக்கு தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

 இதேவேளை அவை வெறுமனே வருடாந்தம் இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு அனுப்பப்படும் சாதாரண வாழ்த்து துண்டுப் பிரசுரங்கள் என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். 


No comments:

Post a Comment