December 29, 2014

விவ­சா­யி­க­ளுக்கு கடன்­களை வழங்­கும்­போது சரி­யான நடை­மு­றை­களை பின்­பற்ற வேண்டும் யாழ்.மாவட்ட அர­சாங்க வங்கி முகா­மை­யா­ளர்­க­ளுக்கு அறி­விப்பு

விவ­சா­யி­க­ளுக்கு காப்­பு­று­திகள் மற்றும் கட­னு­த­விகள் வழங்­கப்­ப­டு­கின்ற பொழுது வங்­கிகள் சரி­யான நடை­மு­றை­களை பின்பற்ற வேண்டும். கடந்த காலங்­களில் ஏற்­பட்ட குறை­பா­டுகள் தொடர்­பான அறிக்­கை­களை விரைவில் சமர்ப்­பிக்க வேண்டும் என யாழ். மாவட்ட அர­சாங்க அதிபர் சு.அரு­மை­நா­யகம் வங்­கி­களின் முகா­மை­யா­ளர்­க­ளுக்கு அறி­வித்­துள்ளார்.

யாழ். மாவட்­டத்தில் விவ­சா­யிகள் எதிர்­நோக்­கி­வ­ரு­கின்ற பிரச்­ச­னைகள் தொடர்­பாக ஆராயும் விசேட கலந்துரை­யாடல் கடந்த வியா­ழக்­கி­ழமை யாழ். மாவட்ட செய­ல­கத்தில் நடை­பெற்ற போது கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில்,
விவ­சா­யி­க­ளுக்கு காப்­பு­று­திகள் மற்றும் கட­னு­த­விகள் வழங்­கும்­போது வங்­கிகள் சரி­யான நடை­மு­றை­களை பின்­பற்ற வேண்டும்.

கடன் கொடுப்­ப­னவின் போது ஏதேனும் தொகைகள் கழிக்­கப்­ப­டு­மாயின் அது தொடர்­பான முழு விப­ரமும் விவ­சா­யி­க­ளுக்கு அறி­யத்­த­ரப்­பட வேண்டும்.

கடந்த காலங்­களில் ஏற்­பட்ட குறை­பா­டுகள் தொடர்­பான அறிக்­கை­களை விரைவில் எம்­மிடம் சமர்ப்­பிக்க வேண்டும். வங்­கிகள் சிர­மங்­க­ளின்றி கட­னு­த­வி­களை வழங்க ஏற்­பா­டு­களை மேற்­கொள்ள வேண்டும் என்றார்.
மாவட்ட அர­சாங்க அதிபர் சுந்­தரம் அரு­மை­நா­யகம் தலை­மையில் நடை­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­டலில் யாழ். மாவட்ட விவ­சாய அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களும் அரச, தனியார் வங்­கி­களின் முகா­மை­யா­ளர்­களும் கலந்­து­கொண்டு மாவட்­டத்தின் விவ­சாய நட­வ­டிக்­கைகள், விவ­சா­யி­களின் பொரு­ளா­தார மேம்­பாடு தொடர்­பாக ஆராய்ந்­துள்­ளனர்.

இக்­க­லந்­து­ரை­யா­டலில், அண்­மையில் நடை­பெற்ற விவ­சாய அபி­வி­ருத்தி குழு கூட்­டத்தில் விவசாய அமைப்புக்களினால் வங்கிகள் மீது சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடை முறைகள் தொடர்பாகவும் கலந்துரை­யாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.