October 08, 2014

மீண்டும் நாடாளுவார் ஜெயலலிதா

பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறை வளாகத்துக்கு வெளியே ஜோதிடர் ஒருவர் சுற்றி வருகிறார். அவர், ஜெயலலிதா பதவி ஏற்ற நாள் (16.5.2011) சரியில்லை. இதனால்தான் இந்த நிலை. இதை அவருக்கு ஏற்கனவே ‘பேக்ஸ்’ மூலம் அனுப்பினேன். 

19–ந்தேதிக்கு மேல் அவருக்கு ஜாமீன் கிடைத்து விடும். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு முன்பை விட வேகமாக செயல்படுவார். மீண்டும் நாடாளுவார். அந்த நாள் வெகுதூரத்தில் இல்லை என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

அவரைச் சுற்றி அ.தி.மு.க.வினர் கூடி நின்று அவரது ஜோதிடத்தை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டு இருந்தனர். ஜோதிடரால் அங்கு கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment