September 10, 2014

ஹாங்காங்கில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான் கைது?

ஒரு விடுதலைக்கு போராடிய நபர்களை எப்படி எல்லாம் வைத்து கபடி ஆடுறாங்கள்
என்பதை மக்களை தெரிந்து கொள்ளுங்கள்
இது ஒரு அப்பட்டமான பொய் செய்தி . இப்படியான செய்திகள் மகிந்தவின் தேர்தல் வெற்றிக்கு பரப்ப்படும் செய்திகளாக இருக்கலாம் 



தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான்
(  சண்முகலிங்கம் சிவசங்கர் ) கொங்கொங் நாட்டில் வைத்து கைது செய்யப் பட்டதாக இரகசிய செய்திகள் வெளியாகியுள்ளது.

இவரை பல மாதங்களாக கண்காணித்து வந்ததாகவும், இவரது மனைவி பிள்ளை ஆகியோர் கனடாவில் இருப்பதாகவும் , இவர் கனடா செல்ல இருந்த தருணத்திலேயே கைது செய்ததாக இலங்கை ராணுவ வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் விசேட விமானம் மூலம் பொட்டம்மான் அவர்களை இலங்கைக்கு கொண்டு செல்லப் படுவார் என தெரிய வருகின்றது.


இது தொடர்பில் இலங்கை அரசின் எந்த ஊடகங்களும் இது வரை  செய்தி   
எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை சிங்கள அரச கட்டுகதையாக கூட இருக்கலாம்

No comments:

Post a Comment