தமிழ்த் தேசியவாதியும், யாழ்ப்பாணத்தின் பிரபல பொருளியல் ஆசிரியருமான சி.வரதராஜன் இன்று 63 ஆவது வயதில் காலமானார். நோய்வாய்ப்பட்டு தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸில் கடந்த 2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார். அத்துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முதலாவது தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment