July 10, 2014

யாழ். அச்சுவேலியில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நால்வர் கைது!

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில்  நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ். அச்சுவேலி பகுதியில் வைத்து குறித்த நான்கு பேரும் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நான்கு பேரும் அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடியதாகவும், அதனால் அவர்களை சோதனைக்கு உட்படுத்தியதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சோதனையின் போது அவர்கள் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தி தவறியமைக்காகவே கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.