தமிழர் பிரதேசங்களில் அண்மைக்காலமாக கைது செய்யப்பட்ட 65 பேரும் விடுதலைப் புலிகளை மீண்டும் கட்டி எழுப்ப முனைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 1கைது செய்யப்பட்ட 10 பெண்களில் எண்மர் பூஸா முகாமிலும் இருவர் வவுனியா தடுப்பு முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் வெளிநாட்டு பணம் காணப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.