இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை யின் காரைநகரில் உள்ள தொழிற் பயிற்சி நிலையத்தினால் வழங்கப்படும் பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கோரப்பட்டுள்ளது.
இப் பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும் தையல், மரவேலை, மேசன், வீட்டு மின்னிணைப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மோட்டார் சைக்கிள் திருத்துதல் ஆகிய பயிற்சி நெறிகளுக்கு பயிலுநர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இத் தொழிற்பயிற்சியினைப் பெறவிரு ம்புவோர் எதிர்வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமைக்கு முன்னர் தமது சுயவிபரத்தினை பயிற்சி இணைப்பாளர், இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை, தொழிற்பயிற்சி நிலையம், காரைநகர் என்றும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment