அச்சுறுத்தல்களும் அழுத்தங்களும் தொடர்வதாக வட மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த வாரம் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் யாழ். விஜயத்தின்போது யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னரே இவ் அச்சுறுத்தல்கள் நிகழ்வதாகவும், இதன் காரணமாக பாதுகாப்பை கருதி யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கடந்த திங்கட்கிழமை தாம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அனந்தி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment