முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோ வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், அவரது மனைவி கயல்விழியுடன் சென்னையில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு வேலூர் வந்தார். அவர்கள் ஜெயிலுக்குள் சென்று முருகன், பேரறிவாளன், சாந்தனை சந்தித்து பேசினர்.
ஜெயில் வாசலில் திரண்டு இருந்த நாம் தமிழர் கட்சியினர் சீமான்–கயல்விழியை உற்சாகத்துடன் வரவேற்றனர்.

No comments:
Post a Comment