August 10, 2013

கிராண்ட்பாஸ் பகுதியில் பொலிஸ் ஊரடங்கு


இலங்கையின் தலைநகர் கொழும்பின் அண்மித்த பகுதியான கிரானபாஸ் பிரதேசத்தில் இன்று இரவு முதல் நாளை காலை 7 மணி மணி வரை பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 
இன்று மாலை அப்பகுதியில் நிலவிய பதற்ற நிலையை அடுத்தே அங்கு ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு இன்னமும் ஊடகவியலாளா் செல்ல அனுமதிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment