July 29, 2013

அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டார் !

மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு டவுன்ஹோல் பகுதியில் அமைந்துள்ள பிரபல ஆடை விற்பனை நிலையம் முன்வைத்து மாலக்க சில்வா மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தாக்குதலுக்குள்ளான மாலக சில்வா கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடைய முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment