13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் தொடர்பிலான வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சியின் முரண்பாட்டு நிலைமை அம்பலமாகும்.
13ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசாங்கத்தின் இரண்டு அணிகள் உருவாகியுள்ளன.
இதனால் அரசாங்கம் பாரிய நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கெக்கிராவ பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment