June 07, 2013

தேவாலயத்திற்குள் புகுந்து இனந்தெரியாதோர் அட்டகாசம்

அங்குலானை, புனித பிரான்ஸிஸ் தேவாலயதிற்குள் நுழைந்த இனந்தெரியாத குழுவினர் தேவாலயத்திற்குள்ளிருந்த சொரூபங்கள் உட்பட பெறுமதிவாய்ந்த பல பொருட்களை அடித்து நொறுக்கி புரட்டி நாசப்படுத்தியுள்ளதாக அங்குலானை பொலிஸார் தெரிவித்தனர்.

தேவாலயத்திற்குள் நேற்று அதிகாலை வேளையில் உள்நுழைந்த இனந்தெரியாத குழுவினரே இவ்வாறு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நற்கருணை பேழை, பூஜை பீடம், பூஜை பீடமேசை மற்றும் இரண்டு சொரூபங்களும், இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திவருவதாகவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment