இந்தியாவிலே தமிழீழத்திற்கான ஆதரவுக் குரலாக மாணவர்களால் நாளை 20.03.2013 புதன்கிழமை தமிழ்நாட்டில்
மேற்கொள்ளப்படவுள்ள ஒரு கோடி மாணவர் போராட்டம்
நடைபெறும் அதே நாளில், அதே நேரத்தில்
பிரித்தானியாவிலும்,பல்லாயிரக்கணக்கில் திரண்டு இந்திய தூதரகம் முன்பாக
போராட்டம் நடாத்தவேண்டும் என பிரித்தானியாவிலே இன்று இரண்டாவது நாளாக
உண்ணா நிலைப் போராட்டத்தை நடாத்திவதும் தமிழ் இளையோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர.நேற்று மதியம் முதல் மத்திய லண்டன் பகுதியில் அமைந்துள்ள இந்திய தூதரகம் முன்
தண்ணீரும் அருந்தாது தாமாகவே முன்வந்து உண்ணாநிலைப்
போராட்டத்தை நடாத்திவரும், மூன்று தமிழ் இளைஞர்களும் கடுமையான
குளிரிலும் போதிய வசதிகளற்ற சூழலிலும்
தமது போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர்.

No comments:
Post a Comment