December 10, 2012

மீண்டும் அதிரும் அம்பாறை பாரிய சத்தத்துடன் நில அதிர்வு

அம்பாறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று (10) காலை பாரிய சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

இன்று காலை 9.00 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

அம்பாரை, தேவாலஹிந்த, வடினாகல மற்றும் கிவுலேகம பிரதேசங்களில் இவ் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து ஆராய்வதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர் என்.பீ.விஜயானந்த தெரிவித்தார்.

No comments:

Post a Comment