பி.ஏ.சங்மாவுக்குதான் அதிமுக ஆதரவு அளிக்கும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
கொடநாடு போகும் முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ.சங்மாவுக்குதான் அதிமுக ஆதரவு அளிக்கும் என்றும், மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜியும் பி.ஏ.சங்மாவை ஆதரிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா அறிவித்து இருந்தார். பின்னர் சென்னை வந்த அவர், முதல் அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார். அப்போது, அவருக்கு ஆதரவு அளிப்பதாக ஜெயலலிதா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கொடநாடு போகும் முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியரசுத் தலைவர் தேர்தலில் பி.ஏ.சங்மாவுக்குதான் அதிமுக ஆதரவு அளிக்கும் என்றும், மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜியும் பி.ஏ.சங்மாவை ஆதரிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா அறிவித்து இருந்தார். பின்னர் சென்னை வந்த அவர், முதல் அமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டார். அப்போது, அவருக்கு ஆதரவு அளிப்பதாக ஜெயலலிதா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment