June 22, 2012

விஜயகாந்திடம் ஆதரவு கேட்போம்: நிர்மலா சீதாராமன்

பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் சென்னை பாரதீய ஜனதா அலுவலகத்தில் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர், ’’ஜனாதிபதி தேர்தலில் சங்மாவுக்கு பாரதீய ஜனதா முழு மனதுடன் ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் பிரணாப்முகர்ஜிக்கு சிவசேனா கட்சி ஆதரவு தெரிவித்து இருப்பதால், பாரதீய ஜனதா கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்பு இல்லை.

அதேநேரத்தில் ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சங்மாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அவருக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்பட அனைத்து கட்சி தலைவர்களிடமும் ஆதரவு கேட்போம்’’ என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

No comments:

Post a Comment