ஹவத்தை பிரதேசத்தில் பதற்ற நிலை தோன்றியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். பிரதேச சபை தலைவரின் வீடு உட்பட மூன்று வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளரிடம் கேட்ட போது, மூன்று வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் பல விசேட பொலிஸ் குழுக்கள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment