யாழ்.பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் முதலாம் ஆண்டு மாணவன் ஒருவர் செவிப்பறை கிழிந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நண்பகல் சக மாணவிகளுடன் உரையாடிக்கொண்டு சென்றுகொண்டிருந்த கலைப்பீடத்தினைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவரை அழைத்த சிரேஷ்ட பிரிவு மாணவர்கள் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர்.
சம்பவத்தில் குறித்த மாணவனின் செவிப்பறை கிழிந்திருக்கின்றது. இந்நிலையில் அவர் உடனடியாக யாழ்.போதான வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். குறித்த மாணவன் மல்லாவியைச் சேர்ந்த தனராஜ் என்று சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டும் இதேபோன்று மற்றொரு மாணவருக்கும் செவிப்பறைப்பாதிப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment