ஜெனீவாவில் இன்று (27) ஆரம்பமாகும் மனித உரிமைகள் பேரவைகக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கவுள்ள தீர்மானங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தற்போது நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது தமது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுரகம் இலங்கையிலுள்ள தனது நாட்டுப் பிரஜைகளைக் கேட்டுள்ளது.
இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டமானது நேரடியாகவே அமெரிக்காவுக்கு எதிராக இருப்பதன் காணரமாகவே இந்த வேண்டுகோளை அது விடுத்துள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த ஆர்ப்பாட்டமானது கொழும்பிலுள்ள தமது தூதுரகத்துக்கு வெளியிலும் இடம்பெறலாம் எனவும் அது தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment