கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியின் அட்டாளைச்சேனை மீனோடைக்கட்டுப் பகுதியில் முச்சக்கர வாகனமொன்று இன்று (28) செவ்வாய்கிழமை காலை தடம் புரண்டதில் நபரொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிந்தவூரிலிருந்து பயணித்த முச்சக்கர வண்டியே மேற்படி விபத்துக்குள்ளானது.
இதன்போது சாரதியுடன் நால்வர் பயணித்திருந்தனர்.
காயமடைந்தவர் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment