Latest News

August 05, 2020

தேர்தல் அமைதிக் காலத்தில் ஒருவர் சுட்டுக் கொலை!
by Editor - 0

அநுராதபுரம்- தஹாயியாகம சந்தியில் நடந்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் எஸ்.எப்.லொக்கா என்ற எரோன் ரணசிங்க கொல்லப்பட்டுள்ளார்.

அநுராதபுரத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு இரவு விடுதி ஒன்றில் வைத்து கராத்தே சாம்பியனான வசந்த சொய்சா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான எஸ்.எப்.லொக்கா என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

இன்னொரு நபருடன் வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போதே தஹாயியாகம புகையிரத கடவைக்கு அருகில் வைத்து இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் எஸ்.எப்.லொக்கா பலியாகியுள்ளார். அத்துடன் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments