Latest News

September 11, 2015

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி 8 ஆவது நாளாகத் தொடர்கிறது கையெழுத்து வேட்டை!
by Unknown - 0

இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வகையில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் 8ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கான தமிழர் செயற்பாட்டுக் குழுவினால் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்படுகின்றது.

“சர்வதேச மனிதாபிமானம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் செயன்முறைக்கான பொறிமுறையை ஸ்தாபிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்துகின்றோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இதன்போது கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டன.
« PREV
NEXT »

No comments