தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் சினிமாத்துறையினருக்கு எதிரகாக போராட்டங்களை முன்னெடுத்து வரும் தமிழ் இளைஞர் ஒன்றியத்தினர் கரூர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 04-09-2015 அன்று சினிமாத்துறைக்கு எதிராக கரூர் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சந்திர மோகன் தலைமையில் மிக வெற்றிகரமாக நடாத்தியிருந்தனர்.
10 மணிக்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக ஆரம்பமான போராட்டம் நண்பகல் 12மணி வரை தொடர்ந்து நடைபெற்றது இதில் கரூர் பகுதியை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன் ஐயாவும் கலந்து கொண்டு போராட்டம்வெற்றி பெற தனது ஒத்துழைப்பை வழங்கியிருந்தர்.
அதேபோல கரூர் பகுதி பொது மக்களும் கலந்து கொண்டு இப்போராட்டம் சமூகத்துக்கு மிக அவசியமானது என்று தமது கருத்துக்களை தெரிவித்துக்கொண்டதோடு ஆதரவை தெரிவித்துக் கொண்டனர். இப்போராட்டத்தில் தமிழ் இளைஞர் ஒன்றியத்தின் கரூர் பகுதியை சேர்ந்த 30 க்கு மேற்பட்ட இயக்கத்தோழர்கள் கலந்து கொண்டதோடு மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் மூலமாக தமது விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தனர்.
இப்போராட்டத்தை சிறப்பாக நடத்திய கரூர் மாவட்டத்தோழர்களுக்கு தமிழ் இளைஞர் ஒன்றியத்தின் தலைமை ஒருங்கிணப்பாளர் பரமசாமி ஜோன்சன்அவர்களும் தமிழ் நாட்டு தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் மகேசு தானுமூர்த்தியும் தமது வாழ்த்துக்களையும் ,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர் இப்போராட்டங்கள் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் ஆகவே ஆதரவளிக்க விரும்புவோர் எம்மோடு தொடர்பு கொள்ளவும்.
நன்றி வணக்கம்.
தமிழ் இளைஞர் ஒன்றியம்.
தமிழுக்காக!!!என்றும் தமிழ் மக்களுக்காக!!!
No comments
Post a Comment