தமிழ் இளைஞர் ஒன்றியத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பரமசாமி ஜோன்சன் அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கும் அறிக்கை!!!
தமிழர்களை மீண்டும் முட்டாளாக்காதீர்கள்!!! சர்வதேச விசாரணையே வேண்டும்!!!
இலங்கையின் ஈழப்பகுதியில் இலங்கை அரசினாலும் சர்வதேசநாடுகளினாலும் மேற்கொள்ளப்பட்ட போர்குற்ற நடவடிக்கையை உள்நாட்டில் விசாரிப்பதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.!!!
2009 ஆண்டு காலப்பகுதியில் உரிமைப்போர் தீவிரமடைந்திருந்த வேளையில் தமிழர்களின் உரிமைகளை நசுக்கும் விதமாக இலங்கை அரசு தனது கையாளாகத்தனத்தின் வெளிப்பாடாக உலக நாடுகள் பலவற்றை அழைத்து போரை நடாத்தி தருமாறு கூறி தமிழர்களின் உரிமை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது. .அந்நேரத்தில் கொத்துக் கொத்தாக தமிழ்மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தது மட்டுமின்றி, சின்னஞ்சிறு குழந்தைகளையும் அழித்தொழித்தார்கள் பெண்களை பாலியல் வண்கொடுமைக்கு உள்ளாக்கியிருந்தார்கள்.
இதற்கு துணையாக பல உலக நாடுகள் செயல்பட்டமையையும் உலகத்தமிழர்கள் நன்கறிவார்கள். இது இப்படி இருக்க எம்மை கொன்று குவித்தவர்களிடமே எமது நீதியை எதிர்பார்க்க சொல்லி அமெரிக்கா போன்ற வல்லரசுக்கள் சொல்வது வேதனையும் வேடிக்கையுமானது. இவர்கள் இப்படி கூறுவது "கடித்து குதறிய சிங்கத்திடமே திருப்பி சென்று ஏன் என்னை கடித்தாய்? இனி கடிக்காதே!!!" என்று சொல்வதற்கு சமம் இதை ஏற்று செயல்படுத்த தமிழர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை.
இதிலிருந்து ஒன்றை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. சர்வதேச விசாரணையை வேண்டாம் என்று கூறும் சக்திகளும் இதில் சம்பந்தப்பட்டுள்ளமை புலனாகின்றது இதனால் தாங்களும் இந்த விசாரணையில் உள்ளாக்கபட்டுவிடுவோம் என்ற பயத்தினாலேயே இப்படி காய்நகர்த்துகின்றது.
ஆகவே தமிழர்களாகிய நாம் இவர்கள் போன்ற கயவர்களின் திட்டத்துக்கு எதிராக பெரும் சக்தியாக எமது எதிர்ப்பு நடவடிக்கைளை உலகுக்கு எடுத்து காட்டுவோம். நாம் சில மாதங்களாக இரவு பகலாக இலங்கைக்கு எதிரான கையெழுத்துக்களை பெற்றோம் எதற்காக?? மக்களுக்கான விடிவு வரும் என்று கருதியே. உலக தமிழர்களான உங்கள் ஒவ்வொருவரின் அந்த உழைப்பு வீணாக போக கூடாதென்றால் நாம் ஒன்று பட்டு எமது எதிர்பை காட்டுவோம.
வரும் நாட்களில் எமது அமைப்பினால் இதற்கு எதிர்பை காட்டக்கூடிய பேரணி ஒன்றை ஏற்பாடு செய்ய உள்ளோம். இப்பேரணிக்கு கலந்து கொள்ள விரும்புவோர் எம்மோடு தொடர்பை ஏற்படுத்தும் படியாகவும். பேரணிக்கான பங்களிப்பை செய்ய விரும்புவோர் உங்கள் பங்களிப்பை செய்யும் படியாகவும் கேட்டுக் கொள்கிறோம். தொடர்புகளுக்கு tamilyouthunited@gmail.com
நன்றி வணக்கம்.
தமிழ் இளைஞர் ஒன்றியம்,
தமிழுக்காக!!! என்றும் தமிழ் மக்களுக்காக!
No comments
Post a Comment