Latest News

September 03, 2015

பிரித்தானிய இளவரசி 3-வது முறை கர்ப்பமாக இருப்பது உண்மைதான்’-வெளியான ரகசிய தகவல்கள்
by Unknown - 0

பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டன் 3-வது முறையாக கர்ப்பமாக இருப்பது உண்மைதான் என அந்நாட்டில் வெளியாகும் வாரப்பத்திரிகை ஒன்று பரபரப்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய இளவரசி மூன்றாவது குழந்தைக்கு தயாரா என சில வாரங்களுக்கு முன்னர் எழுந்த பரபரப்பிற்கு தற்போது ஒரு பதில் கிடைத்துள்ளது.

குட்டி இளவரசியான சார்லோட் பிறந்து 4 மாதங்களுக்கு பிறகு இந்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இளவரசர் வில்லியமும், இளவரசி கேட் மிடில்டன்னும் அடைகாத்து வந்த ரகசியத்தை அந்நாட்டில் வெளியாகும் ஸ்டார் என்ற வாரப்பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது.

பத்திரிகைக்கு நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதில், இளவரசி 3-வது முறையாக கர்ப்பமாக இருப்பது உண்மைதான் என தெரியப்படுத்தியுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி நடைபெற்ற ஒரு அரசு முறை திருமணத்திற்கு இளவரசர் வில்லியம் மட்டுமே சென்றதாகவும், மிக முக்கியமான திருமண நிகழ்வை கூட இளவரசி நிராகரித்தது இதற்கு ஒரு காரணம் என தகவல் தெரியவந்துள்ளது.

மேலும், இளவரசியின் உடல் நலன் பாதிக்கப்படக்கூடாது என்று தான் இளவரசர் வில்லியமும் அவரை அழைத்து வரவில்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இளவரசியின் 3-வது குழந்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தின் இறுதியில் அல்லது மே மாதத்தின் தொடக்கத்தில் பிறக்க வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இளவரசியின் கர்ப்பமான புகைப்படங்கள் நவம்பர் மாதத்தில் வெளியாகும் என அந்த பத்திரிகை கணித்திருந்தாலும், அதை பற்றிய முறையான அரண்மனை அறிவிப்பு அதற்கு முன்னதாகவே வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே எழுந்துள்ளது.
« PREV
NEXT »

No comments