இலங்கை தொடர்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கை, மனித உரிமைகள் தொடர்பிலான விசாரணையே அன்றி, குற்ற விசாரணை அல்லவென ஸ்ரீலங்கா அரசாங்கம் பதிலளித்துள்ளது.
இலங்கை தொடர்பான அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருக்கும், அவரின் அலுவலகத்திற்கும் வெளிவிவகார அமைச்சு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.
ஐ.நா அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் பரிந்துரைகளை உத்தேச புதிய நிறுவனங்களினதும், அதற்குரிய தரப்பினரதும் கவனத்திற்குக் கொண்டுசெல்வதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரி 8 ஆம் திகதியின் பின்னர் இடம்பெற்ற மாற்றங்கள் குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பெருந்தன்மையான கருத்துக்கள் தொடர்பில் மகிழ்ச்சியை வெளியிடுவதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment