Latest News

September 13, 2015

முல்லைத்தீவில் , சர்வதேச விசாரணை, மற்றும் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம்!
by Unknown - 0

தமிழ் இனத்தின் மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புக்கு எதிராக சர்வதேச விசாரணையே வேண்டும் எனக் கோரி முல்லைத்தீவில் மிகப்பெரும் கையெழுத்துப் போராட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இன்று காலை 12.00 மணி தொடக்கம் இக் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.

அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி முல்லைத்தீவில் போராட்டம்!

சிறையில் வாடும் அரசியல் கைதிகளை வி
டுவிக்க வேண்டும் எனக்கோரி முல்லைத்தீவு கச்சேரிக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

சர்வதேச கைதிகள் தினத்தினை முன்னிட்டும் தமது உறவுகள் எந்தவித அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் சிறையில் வாடுவதாகவும், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியுமே மேற்படி இந்த ஆர்ப்பாட்ட நடத்தப்பட்டுள்ளது.

இன்று மன்னார் பிரஜைகள் குழு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய தரப்புக்களின் ஏற்பாட்டில் இப் போராட்டம் இடம்பெற்றது.

காலை 11.00 மணிக்கு முல்லைத்தீவு தனியார் பஸ் நிலையத்தில் ஒன்று கூடிய அரசியல் கைதிகளின் குடும்பத்தினர்கள் மற்றும் பொது மக்கள் அங்கிருந்து ஊர்வலமாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக சென்று அங்கிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப் போராட்டமானது மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர் சகாயம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரது தலைமையில் இடம்பெற்றது.



« PREV
NEXT »

No comments