Latest News

September 14, 2015

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி 11 ஆவது நாளாகவும் தொடரும் கையெழுத்து வேட்டை!
by Unknown - 0

இறுதிக்கட்ட யுத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணயை வலியுறுத்தி இன்று (14) 11 ஆவது நாளாகவும் யாழ்ப்பாணத்தில் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கான தமிழர் செயற்பாட்டு குழுவினால் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

“சர்வதேச மனிதாபிமானம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் செயன்முறைக்கான பொறிமுறையை ஸ்தாபிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்துகின்றோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இதன்போது கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டன.

யாழ். நகர் பகுதி மற்றும் பஸ் தரிப்பு நிலையங்களில் இடம்பெற்ற கையெழுத்து வேட்டையில் பெருந்திரலான மக்கள் கலந்து கொண்டனர் .
« PREV
NEXT »

No comments