உலகச்சதிகாராகளுடன்இணைந்து சிறிலங்கா சிங்கள இனவெறி அரசு நடத்தி முடித்த கோர வெறியாட்டத்தில் இனபாடுகொலையே கண்டித்தும் எமது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரிஉலக மனித மந்தநேயம் போற்றும் ஐ நா சபைமுன்றலில் 13-09-2013 அன்று தனது இன்னுயிரை அக்கினியில் தியாகம் செய்த எம் தேசப்புதல்வனின் இழப்பு உலக தமிழர்களை எல்லாம் மீண்டும் எழுச்சி கொள்ள வைத்தது 18-05-2009 பின்னர் எல்லாம் முடித்துவிட்டது என்று சிங்கள இனவாதிகள் ஒப்பாரி வைக்கின்றார்கள் அவை அனைத்தையும் பொய்யாக்கிவிட்டு தனது உடலில் அக்கினியை அனைத்துகொண்டு போராட்டத்தின் எழுச்சியை மக்கள் மனதில் விதைத்து சென்றுள்ளார் ஈகைப்ரொளி செந்தில்குமரன்.
இவரின் தியாகம் ஒரு எழுச்சியின் தியாகம் எமது போராட்டத்துக்கு உயிர் ஊட்டுகின்ற தியாகம் அப்படியான அர்ப்பணிப்பை எமது வரலாற்றில் நிறுவிச் சென்றுள்ளார் ஈகைப்போராளி செந்தில்குமரன். ஈகைப்போராளியின் வீரம் உறுதியாக எதிர்காலத்தில் இன்னும் வலிமையான வரலாறாக மாறும். போராளிகளின் தியாகத்தால் தமிழீழம் அடைவது உறுதி என்று நாம் உறுதிகொள்வோம். தமிழீழத்தை அடையும் வரையும் இனபாடுகொலைக்கு நீதிகிடைக்கும் வரை நாம் ஓயமாட்டோம் என்று எதிர்வரும் 21-09-2015 அன்று ஐ நா சபை முன்றலில் உறுதிகொள்வோம் செந்தில்குமரன் கடைசிவரை இனவிடுதலைக்காக வாழ்ந்து உயிர்தியாகம் செய்தவர் அவர் மேல் ஆணையேற்போம்
சுவிஸ் ஈழத்தமிழரவை
http://feeds.feedburner.com/vivasaayi/QMzm
No comments
Post a Comment