நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறி த்த இதுவரையில் இரகசியமாக வைக்கப்பட்டிருந்ந 64 ஆவணங்களை மேற்கு வங்காள அரசு நேற்று வெளியிட்டது.
சுதந்திர போராட்டத்தின்போது 1939ஆம் ஆண்டு மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விலகினார். பின்னர் அவர் ஜேர்மன் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்று இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கி இந்தியாவில் வெள்ளையர்களுக்கு எதிராக போராடினார். பின் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறந்துவிட்டதாக கூறப்பட்டது.
எனினும், அதை நேதாஜியின் குடும்பத்தினரோ, அவருடைய ஆதரவாளர்களோ ஏற்கவில்லை. இந்த விமான விபத்து சம்பவத்துக்கு பின்னர் நேதாஜி முன்னைய சோவியத் ரஷ்யா வில் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் நேதாஜி இறந்தாரா, உயிரோடு இருக்கிறாரா? என்ற சர்ச்சை அண்மைக்காலம் வரை நீடித்தது.
இந்நிலையில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரித்து வரும் அவரை பற்றிய 100க்கும் மேற்பட்ட இரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிடவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இவற்றை வெளியிட் டால், மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும், நட்பு நாடுகள் சிலவற்றுடன் உறவுகள் பாதி க்கப்படும் என்பதால் அந்த கோப்புகள் பகிரங்கமாக வெளியிடப்படா மல் பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந் நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 64 ஆவண ங்களை மேற்கு வங்காள அரசு நேற்று வெளியிட்டது. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட 64 ஆவணங்களும் அங்குள்ள பொலிஸ் அருங்காட்சியகத்தின் முதல் தளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளன. இந்த ஆவணங்களை கொல்கத்தா பொலிஸ் ஆணையர் சுரஜித் வெளியிட்டார்.
அத்தோடு இவ் ஆவணங்கள் அட ங்கிய இறுவட்டு நேதாஜி குடும்பத்தினரிடமும் ஒப்படைக்கப்பட்டது. 12,744 பக்கங்கள் கொண்ட இந்த ஆவணங்கள் பொது மக்கள் பார்வை க்காக பதிவேற்றம் செய்யப்படும் பணி தொடங்கியுள்ளது. இந்த ஆவ ணங்கள் அனைத்தும் எதிர்வரும் திங்கட் கிழமை பொதுமக்கள் பார் வைக்கு வைக்கப்படும் என்றும் கூறப் படுகிறது.
No comments
Post a Comment