Latest News

September 09, 2015

யாழில் கிணற்றிலிருந்து குண்டு மீட்பு
by admin - 0

யாழ். கொக்குவில் தொழிநுட்பக் கல்லூரியின் கிணற்றிலிருந்து நேற்று காலை 11 மணியளவில் வெடிக்காத நிலையில் மோட்டார் ரக வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகக் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளரொருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த கல்லூரியில் காணப்பட்ட கிணற்றின் நீரை வெளியேற்றி சுத்தப்படுத்திய தொழிலாளர்களே மேற்படி குண்டை மீட்டுள்ளனர்.

இதே வேளை குறித்த கல்லூரியில் காணப்படும் கிணற்று நீர் பயன்படுத்த முடியாத நிலையிலிருந்தமையால் மாணவர்களும்,விரிவுரையாளர்களும் அண்மைக்காலமாக இந்த நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாகக் கிணறு இறைத்துச் சுத்தப்படுத்தாமையே இதற்குக் காரணமென விசனம் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக மாணவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய மாணவர்களுக்கு நல்லூர் பிரதேச சபையால் தற்காலிகமாகக் குடிதண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது


« PREV
NEXT »

No comments