Latest News

September 16, 2015

உலகக் கிண்ணத்தின் போது ரசிகர்களை கலங்கச் செய்தவர் உலகை விட்டுப் பிரிந்தார்!
by Unknown - 0

பிரேசில் கால்பந்தாட்ட அணியின் அதி தீவிர ரசிகரான குளோவிஸ் பெர்ணான்டஸ் தனது 60 ஆவது வயதில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. 

குளோவிஸ் பெர்ணான்டஸ் 'கவுச்சோ டா கோபா' என செல்லமாக அழைக்கப்படுகின்றார்.

பிரேசில் தேசிய கால்பந்தாட்ட அணியின் 150 இற்கும் அதிகமான போட்டிகளை , 60 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று கண்டுகளித்துள்ள இவர் கடந்த வருடம் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டிகளின் போது உலகப்பிரபலம் பெற்றார்.

அத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் , ஜேர்மனி அணி பிரேசிலை 7-1 என்ற கோல் கணக்கில் வென்றது. பிரேசிலின் தோல்வியை தாங்க முடியாத அவர் தன்னிடமிருந்த மாதிரி கிண்ணத்தை அணைத்துக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதமை சர்வதேச ஊடகங்களில் பதிவானதுடன் பலரது அனுதாபத்துக்கும் உள்ளாகியிருந்தார். 

சமூகவலையமைப்புகளில் அவரது படங்கள் பகிரப்பட்டு வந்தன. இந்நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் அவர் கடந்த 9 வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவல் உலகம் பூராகவும் உள்ள கால்பந்து ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
« PREV
NEXT »

No comments