பாரிய அளவிலான ஊழல் மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சி வழங்கிய பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன, சட்டவிரோதமான முறையில் ரக்னா லங்கா நிறுவனத்திற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதனை ஏற்றுகொண்டுள்ளார்.
ரக்னா லங்கா நிறுவனத்திற்கு 3473 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் சட்டரீயாக 89 துப்பாகிகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக உறுதியாகியுள்ளது.
இதற்கிடையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்றைய தினம் மீண்டும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்திய சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைக்காக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விசாரணை ஆணைகுழுவில் ஆஜராகினார் என அதன் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment